வரும் செப்டம்பர், அக்டோபரில் நடைபெறவுள்ள பிளஸ் 2 தனித் தேர்வுக்கான
விண்ணப்பத்தை நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்கத்
தகுதியானவர்கள்: இத்துறையால் நடத்தப்பட்ட மேல்நிலை தேர்வெழுதியோர்,
தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி
பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் 01.10.2015 அன்று 16 1/2 வயதும் பூர்த்தி
அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.