பிளஸ் 2 தனித்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் பதிவு

வரும் செப்டம்பர், அக்டோபரில் நடைபெறவுள்ள பிளஸ் 2 தனித் தேர்வுக்கான விண்ணப்பத்தை நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்: இத்துறையால் நடத்தப்பட்ட மேல்நிலை தேர்வெழுதியோர்,
தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் 01.10.2015 அன்று 16 1/2 வயதும் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பிக்க கடைசி நாள்: கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு, நேரில் சென்று 13.08.2015 முதல் 19.08.2015 மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த கூடுதல் அறிவுரைகள் ஆகியவற்றை www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துக் கொள்ளலாம்