அரசின் நல்லாசிரியர் விருதுக்கு,
ஆசிரியர்களின் யோகா பயிற்சி மதிப்பெண்ணும் கணக்கிடப்படும்'
என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார்
மெட்ரிக்
பள்ளி ஆசிரியர்கள்
உட்பட தகுதியான
ஆசிரியர்கள், ஆகஸ்ட், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கடந்த, 2014 - 15க்கான நல்லாசிரியர்
விருதுக்கு, ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவிப்பு
வெளியாகியுள்ளது. இதன்படி, அனைத்து அரசு, அரசு
உதவி பெறும்,
தொடக்க, நடுநிலை,
உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், தனியார் மெட்ரிக்
பள்ளி ஆசிரியர்களும்,
ஆகஸ்ட், 10ம்
தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, இடைநிலை கல்வி
இணை இயக்குனர்
கார்மேகம் அறிவித்துள்ளார்.
நல்லாசிரியராக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:
* 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியில்
இருக்க வேண்டும்.
* கடந்த ஆண்டு செப்டம்பர்,
30ம் தேதிக்கு
முன் ஓய்வு
பெற்றவராக இருக்கக்கூடாது.
* பள்ளிக்கு காலந் தவறாமல்
வந்திருக்க வேண்டும்.
* தொடர்ந்து, மூன்று ஆண்டுகள்
தன் வகுப்பு
அல்லது பாடத்தில்,
'சென்டம்' அல்லது
அதிக தேர்ச்சி
அளித்திருக்க வேண்டும்.
* தலைமை ஆசிரியராக இருந்தால்,
தன் பதவிக்காலத்தில்
தேர்ச்சி அதிகரித்திருக்க
வேண்டும்.
* என்.சி.சி.,யான தேசிய
மாணவர் படை,
என்.எஸ்.எஸ்., என்ற
நாட்டு நலப்பணித்திட்டம்,
'சாரண, சாரணியர்
இயக்கம் போன்றவற்றிலும்,
யோகா பயிற்சி
அளிப்பதிலும் பங்கெடுத்திருந்தால், அதற்கு
தனி மதிப்பெண்
வழங்கப்படும்.