'கவுன்சிலிங்' துவங்கியது

சென்னை: ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணிபுரிய இடைநிலை ஆசிரியருக்கான 'கவுன்சிலிங்' நேற்று துவங்கியது.

தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், உண்டு, உறைவிடப் பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. சமீபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி முதல் கட்டமாக, 454 இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு நேற்று ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில் கவுன்சிலிங் துவங்கியது. துறை இயக்குனர் சிவசண்முக ராஜா பணி நியமன ஆணை வழங்கினார்.