பள்ளி குழந்தைகளை எப்படி நடத்தவேண்டும் புதிய விதிமுறை அரசு இணையதளத்தில்

மழலை வகுப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் பிரிகே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி.ஆகிய
வகுப்புகள் படிக்கக்கூடிய குழந்தைகளை எப்படி நடத்தவேண்டும் என்றும் அவர்கள் இருக்கும் வகுப்பறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை புதிய விதிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- 
* பிரிகே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் பெட்ரோல் பங்குகளில் இருந்து 300 அடி தள்ளி அமைத்தல். 
* வகுப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். 
*பள்ளி வளாகத்தில் யாரும் புகை பிடிக்கக்கூடாது என்றும் மது விலக்கு பெற்ற இடம் என்றும் பள்ளியின் முன் பலகையில் எழுதி இருக்க வேண்டும். 
* எந்த காரணத்தை கொண்டும் குழந்தைகளை ஆசிரியர்கள் உள்ளிட்ட யாரும் பள்ளிக்கூடத்தில் அடிக்கக்கூடாது. அவ்வாறு அடித்தால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
* வகுப்புகள் நிரந்தர கான்கிரீட் கூரையாக இருக்கவேண்டும். வகுப்பறைகள் காற்றோட்டமாக இருக்கவேண்டும். கூடிய மட்டும் காம்பவுண்ட் சுவர் கட்டுதல். 
* தீ அணைப்பு கருவிகள், முதல் உதவி கருவிகள் தயாராக இருக்க வேண்டும். 
* குழந்தைகளை அழைத்துச் செல்லும் பஸ்கள், வேன்களில் மஞ்சள் நிற வர்ணம் பூசவேண்டும். அவசர போன் நம்பர் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வாகனங்களில் எழுதுவது. 
* பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. 
* நடனத்துடன் பாட்டு பாட வைக்க வேண்டும். 
* விளையாட்டு முறையில்தான் கல்வி கற்பிக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.