மறுபிறவி இருந்தால் இந்தியாவிலேயே மீண்டும் பிறப்பேன்.. இப்படிச் சொன்னவர் நம் கலாம்

சென்னை: மறுபிறவி என ஒன்று இருந்தால் நிச்சயம் மீண்டும் இந்தியாவிலேயே பிறப்பேன் என முன்பொருமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம். இந்தியாவில் பிறந்து, இங்கேயே படித்து, ஆராய்ச்சி செய்து, குடியரசுத் தலைவராக பதவி வகித்து, மக்கள் ஜனாதிபதியாக வாழ்ந்து, தனது இறுதி மூச்சையும் இங்கேயே விட்டுள்ளார் அப்துல் கலாம். அவரது திடீர் மறைவால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. கனவு காணச் சொன்னாயே இது கனவாகவே போய் விடக் கூடாதா என மக்கள் வேதனையில் உள்ளனர். முடிந்தால் மீண்டும் உயிர் பெறுங்கள் எங்களுக்கு உங்களைப் போன்ற நல்ல தலைவர் தேவை என சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். ADVERTISEMENT இந்த நிலையில், கடந்த தீபாவளி பண்டிகையின் போது சன் தொலைக்காட்சியில் அப்துல் கலாமின் பேட்டியில் இடம் பெற்ற சில சுவாரஸ்யத் தகவல்களை இங்கே நினைவு கூறலாம்.