6.15 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

நடப்பு கல்வியாண்டில், 6.15 லட்சம் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, துவக்கி வைத்தார்.தமிழகத்தில், 2005 - 06 முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 11ம் வகுப்பு படிக்கும், அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.


              நடப்பு கல்வியாண்டில், 223.17 கோடி ரூபாய் செலவில், 11ம் வகுப்பு படிக்கும், 2.73 லட்சம் மாணவர், 3.41 லட்சம் மாணவியர் என, மொத்தம், 6.15 லட்சம் பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று துவக்கி வைத்து, ஐந்து மாணவருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சுப்ரமணியன், வீரமணி, அப்துல் ரஹீம் மற்றும் அதிகாரிகள், கலந்து கொண்டனர்.