கலாமிற்கு அஞ்சலி: 30ம் தேதி முழு கடையடைப்பு நடத்த வணிகர் சங்கம் முடிவு

மறைந்த அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது நல்லடக்கம் நடைபெறும் 30ம் தேதி வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்த தமிழக வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து தமிழக வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் வெளியிட்ட அறிவிப்பில், அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.