பொறியியல் படிப்பு: மாணவர் சேர்க்கைக்கு இன்னும் 1,41,618 இடங்கள் காலி

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிய இன்னும் 14 நாள்களே உள்ள நிலையில், சேர்க்கை பெற்றவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது.அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கியது.

     கலந்தாய்வுக்கு இதுவரை மொத்தம் 68,363 மாணவர்கள் அழைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இவர்களில் 51,498 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 16,632 பேர்பங்கேற்கவில்லை. 233 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.தற்போது, 1 லட்சத்து 41 ஆயிரத்து 618 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன.