'இலவச லேப் - டாப் இப்போதைக்கு கிடைக்காது'

'தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் இலவச, 'லேப் - டாப்' வினியோகம் துவங்க, மேலும் சில மாதங்களாகும்' என, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிள
ஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் இலவச, 'லேப் - டாப்'களை, மாநில அரசு வழங்கி வருகிறது. கடந்த கல்வியாண்டில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், சில பள்ளிகளில் மட்டும், 'லேப் - டாப்' வழங்கப்பட்டது.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறையான, 'எல்காட்' வட்டாரங்கள் கூறியதாவது:
'லேப் - டாப்' சப்ளை செய்வதற்கான நிறுவனத்தை, தேர்ந்தெடுத்துவிட்டாலும், அவர்களுடன் விலை குறைப்பு குறித்து பேசி வருகிறோம். மொத்தம், 10.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன; ஒரு, 'லேப் - டாப்'க்கு, 50 ரூபாயை குறைத்தாலும், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.
அதற்காக, அந்த தனியார் நிறுவனத்திடம், தொடர்ந்து பேசி வருகிறோம். எனினும், அந்த நிறுவனம், 'லேப் - டாப்' சப்ளை செய்ய, குறைந்தது இரு மாதங்களாகும். தனியார் நிறுவனத்தின் சப்ளை துவங்கியதும், தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும், 'லேப் - டாப்' வழங்கப்படும்; எனவே, மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.