விரும்பிய இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கருதினால்ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது‘ என்று இடமாறுதலைஎதிர்த்து
தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இடமாறுதலை எதிர்த்து வழக்கு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றிவந்தவர்கள் ஆரோக்கிய அருள்தாஸ், லதாமகேசுவரி. இவர்கள், 2பேரையும் செங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குமாற்றுப்பணியாக இடமாறுதல் செய்து மாவட்ட தொடக்கக்கல்விஅதிகாரி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யும்படி ஆசிரியர்கள் 2 பேரும் மதுரைஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிஎஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுதரப்பில் வக்கீல் வி.முருகானந்தம் ஆஜராகி வாதாடினார்.
பரந்த மனப்பான்மை தேவை
மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:-
நிர்வாகம் மற்றும் மாணவர்கள் நலன்கருதி மனுதாரர்களைஅதிகாரிகள் மாற்றுப்பணியாக இடமாறுதல் செய்துள்ளனர். ஆசிரியர்பணி என்பது இடமாறுதலுக்கு உட்பட்ட பணி தான். தங்களது விருப்பம்இல்லாமல் இடமாறுதல் செய்தது தவறு என்று மனுதாரர்கள்கூறுவதை ஏற்க முடியாது. தாங்கள் விரும்பிய இடத்தில் தான்பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வுசெய்து இருக்கக்கூடாது. ஆசிரியர் பணி புனிதமானது. ஆசிரியர்கள்பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்.
எதிர்கால சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்குமுக்கியமானது. ஆசிரியர்கள் தேவையில்லாமல் வழக்கு போட்டுகோர்ட்டு நேரத்தை வீணடிக்கக்கூடாது. சமூகத்தை நல்ல நிலைக்குகொண்டு செல்வதற்காக ஆசிரியர்கள் தங்களது ஆற்றலை செலவிடவேண்டும். மனுதாரர்களின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.