பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்.,2ம் ஆண்டில் சேர வாய்ப்பு

சென்னை:அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு, பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.பார்ம்., படிப்புகளில், டிப்ளமோ முடித்தோர், நேரடியாக
இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான விண்ணப்பத்தை, www.tnhealth.org; www.tn.gov.in என்ற இணையதளங்களில், இன்று முதல் ஜூலை, 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். விண்ணப்பங்களை, ஜூலை, 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.