சென்னை:அரசு மருத்துவக்
கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு,
பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.பார்ம்., படிப்புகளில், டிப்ளமோ முடித்தோர்,
நேரடியாக
இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான விண்ணப்பத்தை,
www.tnhealth.org; www.tn.gov.in என்ற இணையதளங்களில், இன்று முதல் ஜூலை,
5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். விண்ணப்பங்களை, ஜூலை, 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.