பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு சரியாக செய்யவில்லை தேர்வுத்துறை இணை இயக்குனரிடம் மாணவ-மாணவிகள் புகார்

பிளஸ்-2 விடைத்தாள் மறு கூட்டல்மறுமதிப்பீடு சரியாகசெய்யவில்லை என்று மாணவமாணவிகள் நேற்று அரசு தேர்வுகள்
இணை இயக்குனர் அமுதவல்லியிடம் புகார் தெரிவித்தனர்.
மறுகூட்டல்மறுமதிப்பீடு
கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு நடைபெற்றது. 8 லட்சத்து 82ஆயிரத்து 260 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்தேர்வு முடிவு மேமாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டதுமுடிவு பார்த்தபோதே அவர்கள்எடுத்த மதிப்பெண்களும் தெரிந்துவிட்டது.
மதிப்பெண் அதிகம் எதிர்பார்த்த மாணவ-மாணவிகள் 1 லட்சத்து 566பேர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர்மறுகூட்டலுக்குமட்டும் 2835 பேரும்மறு மதிப்பீடு கோரி 3 ஆயிரத்து 502 பேரும்விண்ணப்பித்தனர்மொத்தத்தில் 6337 பேர் விண்ணப்பித்தனர்மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம்உள்ளவர்களுக்கு இணையதளத்தில் முடிவு வெளியிடப்பட்டது.
கல்வித்துறை அதிகாரியிடம் புகார்
இந்த நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு சரியாகசெய்யவில்லை என்றும்அவ்வாறு சரியாக செய்திருந்தால் மருத்துவபடிப்பில் இடம் கிடைப்பதற்கான கட்-ஆப் மதிப்பெண் கிடைத்திருக்கும்என்றும் கூறி சில மாணவ-மாணவிகள் நேற்று அரசு தேர்வுகள்இயக்குனர் கு.தேவராஜனை சந்திக்க சென்றனர்.
ஆனால் அவர் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்குசென்றுவிட்டதால் இணை இயக்குனர் அமுதவல்லியை சந்தித்து புகார்தெரிவித்தனர்.
20 மதிப்பெண் கூடுதலாக கிடைக்க வேண்டும்
புகார் தெரிவித்த மாணவ-மாணவிகளில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவர் கூறியதாவது:-
நான் கணிதம்வேதியியல் பாடங்களில் தலா 200-க்கு 200 மதிப்பெண்எடுத்துள்ளேன்இயற்பியல் தேர்வில் 200-க்கு 199 மதிப்பெண்பெற்றுள்ளேன்நான் மிகவும் பிற்பட்டோர் பிரிவில் உள்ளதால் எனக்குஅண்ணா பல்கலைக் கழகத்தில் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில்மெக்கானிக் கல் பிரிவில் இடம் கிடைக்கும்.
மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் குறைந்துள்ளதுதாவரவியல் பாடத்தில்75-க்கு 75 மதிப்பெண் பெற்றுள்ளேன்ஆனால் விலங்கியல் பாடத்தில்75-க்கு 52 மதிப்பெண்தான் போடப்பட்டுள்ளதுஆனால் நான்விலங்கியல தேர்வில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடைஎழுதி உள்ளேன்பாட புத்தகத்தில் உள்ள விடையை அப்படியேஎழுதியும் ஒவ்வொரு கேள்விக்கும் போடவேண்டிய மதிப்பெண்ணைவிட ஒரு மதிப்பெண் குறைவாகத்தான் போடப்பட்டுள்ளதுஅவ்வாறுஎனக்கு 20 மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதுஎப்படியும் 75-க்குகுறைந்த பட்சம் 72 மதிப்பெண்ணாவது போடவேண்டும்.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தும் எனக்கு மாற்றம் இல்லைஎன்றுதான் வந்துள்ளதுசரியாக மறுமதிப்பீடு செய்யவில்லைஇதுகுறித்து எப்படியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.
இவ்வாறு அந்த மாணவர் தெரிவித்தார்.
மறுகூட்டலில் விடுபட்டுள்ளது
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில்,விலங்கியல் தேர்வில் மறு கூட்டலில் 3 மதிப்பெண் விடுபட்டுள்ளது.அந்த மதிப்பெண் போட்டால் மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் உயர்ந்துகண்டிப்பாக எனக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துவிடும்என்றார்.
தருமபுரி மாட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில்வர்த்தககணித விடைத்தாளில் 10 மதிப்பெண் கூட்டாமல் விடுபட்டுள்ளது.அதை கூட்டினால் எனக்கு 10 மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும்.
இப்படியாக பல மாணவமாணவிகள் இணை இயக்குனர்அமுதவல்லியிடம் பெற்றோருடன் சென்று புகார் தெரிவித்தனர்.
இது குறித்து இணை இயக்குனர் அமுதவல்லி கூறியதாவது:-
தேர்வு கூடத்தில் சரியாக கண்காணிக்காத ஆசிரியர் மீது நடவடிக்கைஎடுத்தால் ஆசிரியர் சங்கத்தினர் குரல் கொடுத்து போராட்டம்நடத்துகிறார்கள்புகார் தெரிவித்த மாணவர்களில் சிலர்மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்காதவர்கள்சில மாணவர்கள் மறுமதிப்பீடு சரியாக செய்யவில்லை என்கிறார்கள்மறுமதிப்பீடுசெய்வது 3 ஆசிரியர்கள் கொண்ட குழுதான் செய்கிறதுமாணவர்கள்கொடுத்துள்ள புகார்கள் வாங்கப்பட்டுள்ளதுஅரசு தேர்வுகள்இயக்குனரிடம் தெரிவித்து அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான்இறுதியானது.