தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.
சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக இயக்குநர்
அலுவலகத்தில், பொறியியல் படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) சேர
விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா
பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2015-16 பொறியியல் சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள் மே 6-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன.
மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 515 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்ட
நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பேர்
மட்டுமே சமர்ப்பித்தனர். இவர்களில் மாணவர்கள் 95,300 பேர், மாணவிகள் 58,938
பேர் ஆவர்.
விண்ணப்பித்தவர்களில், 23 பேர் 200-க்கு 200
மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தரவரிசைப் பட்டியலில் கோவையைச்
சேர்ந்த கீர்த்திபாலன் என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார்.
தரவரிசைப் பட்டியலை www.annauniv.edu என்ற இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.