சென்னை பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வினா-விடை சிடி தயாரிப்பு: மேயர் 29–ந் தேதி வெளியிடுகிறார்.
மாணவர்கள் உயர்கல்வி பயில 10 மற்றும் பிளஸ் – 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்
பெற வேண்டும் என்பது இன்றியமையாததாகும். அதன்படி 10 மற்றும் 12–ம் வகுப்பு
பொது தேர்வை எதிர் கொள்ளும்
மாணவ – மாணவிகள் கூடுதல் மதிப்பெண் வாங்குவதற்காக
பல்வேறு வினா – விடை பயிற்சி கையேடுகளை வாங்குவார்கள். தற்போது அண்ணா
நகரில் உள்ள ராங்கி மார்ஸ் நிறுவனத்தார் பிளஸ் – 2 மற்றும் 10–ம் வகுப்பு
பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறும் வகையில்
வினா – விடைகளை சி.டியாக தயாரித்து உள்ளார்கள்.
10–ம் வகுப்பு மாணவர்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியல்
பாடங்களுக்கும் 10–ம் வகுப்பு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான இயற்பியல்,
வேதியியல், உயிரியல் பாடங்களுக்கும் உரிய வினா – விடைகள் எளிதில் புரியும்
வண்ணம் சி.டியாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இது போல் 12–ம் வகுப்புக்கான
இயற்பியல், வேதியில், தாவரவியல், உயிரியல் பாடங்களின் வினா – விடைகள்
மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சி.டிக்களாக தயாரிக்கப்பட்டு
உள்ளது. ராங்கி மார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த சிடி வெளியீட்டு விழா
வருகிற 29–ந் தேதி காலை 6 மணிக்கு அண்ணாநகரில் நடக்கிறது. விழாவில் சிறப்பு
விருந்தினராக மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு வினா – விடை சிடியை
வெளியிடுகிறார். இது குறித்து அண்ணாநகர் ராங்கி மார்ஸ் சிறப்பு பயிற்சி
மற்றும் ஹைடெக் அகாடமியின் மானேஜிங் டைரக்டர் சிவபிரகாசம் கூறுகையில், 10
மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிதில்
புரியும் வகையில் வினா – விடைகளை சிடியாக உருவாக்கி உள்ளோம். தகுதி,
அனுபவம் மிக்க ஆசிரியர்கள் குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிடியை
பயன்படுத்தும் மாணவர்கள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி என்று
கூறினார்.