பூ விற்பவரின் மகள் மாநில முதலிடம்

திருநெல்வேலி: திருநெல்வேலி, என்.ஜி.ஓ.,காலனி புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி முத்துவேணி, சமூகஅறிவியலில் 99 மதிப்பெண் மற்றும் அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண் பெற்று 499
மதிப்பெண்களுடன் மாநில முதலிடம் பெற்றார்.முத்துவேணி கூறுகையில், ''தந்தை முத்துக்கிருஷ்ணன் தெருத்தெருவாக பூ விற்பனை செய்கிறார். தாய் பார்வதி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். வறுமையான சூழலிலும் அக்கா இசக்கியம்மாள், அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயில்கிறார்.
வீட்டில் தொலைக்காட்சி இருந்தது. இருப்பினும் படிப்பிற்காக கடந்த ஒரு ஆண்டாக கேபிள் இணைப்பை நிறுத்திவிட்டோம்,'' என்றார்.