ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் மதுரை மாணவி சாதனை

மதுரை: பத்தாம் வகுப்பு ஐ.சி.எஸ்.இ., பாடப் பிரிவுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மதுரை அருகே வீரபாஞ்சான் லட்சுமி பள்ளி
மாணவி சுபாஷினி மாநில அளவில் ௨ம் இடம் பெற்றார்.மாவட்டத்தில் எட்டு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். இதில் சுபாஷினி மொத்தம் 600க்கு 585 மதிப்பெண் பெற்றார். இவரது தந்தை பாஸ்கரன், இன்ஜினியர். இவர்கள் தாசில்தார் நகர் பெரியார் வீதியில் வசிக்கின்றனர்.மாணவி கூறுகையில், "மாநில ரேங்க் எதிர்பார்க்கவில்லை. பள்ளியிலும், வீட்டிலும் படிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தனர். குறிப்பாக பள்ளியில்