மத்திய பாட திட்ட வாரியமான
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 29ம் தேதிக்குள் வெளியாகும்
என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடந்த,
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, முடிவுகள்,
முறையே, வரும்
19ம் தேதியும், 29ம் தேதியும் வெளியிட, சி.பி.எஸ்.இ.,
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விடைத்தாள் திருத்தம் மற்றும் மதிப்பெண்
பட்டியல் தயாரிப்பு பணிகள் முடிந்தால், அதற்கு முன்பே கூட வெளியிடப்படலாம்.- நமது நிருபர்