3 மணி நேரம் தாமதத்துக்குப் பின் வெளியானது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.முன்னதாக காலை 11 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதியம் 2.15 மணியளவிலேயே தேர்வு முடிவுகள் வெளியாகின.சுமார் 3 மணி நேரம் தாமதமாக முடிவு வெளியானதால் மாணவர்கள், பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகினர்

 
        .மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி நிறைவடைந்தது.தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 25-ம் தேதி வெளியான நிலையில், 10-ம் வகுப்பு தேர்வுமுடிவுகள் 27-ம் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ முதலில்அறிவித்திருந்தது. பின்னர் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 28-ம் தேதி (இன்று) வெளியிடப்பட்டது.தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.