பிளஸ் 2 துணைத்தேர்வு பதிவு துவக்கம்

பிளஸ் 2 தேர்வில், 78,722 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதோர் மற்றும் தேர்வுக்குப் பதிவு செய்து, பல காரணங்களால் தேர்வில்
பங்கேற்காதவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு, ஜூன் இறுதி வாரத்தில் நடக்க உள்ளது. இதற்கான பதிவு, நாளை துவங்கி, 20ம் தேதி முடிகிறது. பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும், எந்தப் பாடத்துக்கு தேர்வு எழுத வேண்டும் என, பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம், 50 ரூபாய்; ஒவ்வொரு பாடத்துக்கும், 50 ரூபாய்; இதர கட்டணம், 35 ரூபாய் ரொக்கமாக செலுத்த வேண்டும் என, தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.