பிளஸ்–2 மறுகூட்டலுக்கு 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு முடிவு கடந்த 7–ந்தேதி வெளியிடப்பட்டது. 8–ந்தேதி முதல் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியில் இருந்து மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.

அதன்படி பள்ளிக்கூடங்களில் விரும்பிய மாணவ–மாணவிகள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். நேற்று வரை 85 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க நாளை (14–ந்தேதி) கடைசி நாள்.