பி.இ.: 1.70 லட்சம்; எம்.பி.பி.எஸ்.: 27,125 விண்ணப்பங்கள் விநியோகம்

பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இதுவரை 1.70 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 
2015-16 கல்வியாண்டில் பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதி தொடங்கியது. மே 2
7-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. 
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 60 மையங்களில் வெள்ளிக்கிழமை (மே 15) வரை 1.70 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ்.: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த மே 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாள்களில் மொத்தம் 27,125 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 
வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.