பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள்: மே முதல் வாரத்தில் விநியோகம் By dn, சென்னை

தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வில் பங்கேற்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது.

விண்ணப்பங்களை அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இரண்டே கால் லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட உள்ளது.
மே மாதம் முதல் வாரத்தில் பிளஸ் தேர்வுகள் வெளியாகும் என்பதால், அதற்கு முன்பே விண்ணப்ப விநியோகத்தைத் துவக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு விண்ணப்பப் படிவங்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.