வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஞாயிறு தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 5 கோடியே 60 லட்சம் வாக்காளர்களில் இதுவரை 2 கோடி பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் இந்த திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், விடுபட்ட வாக்காளர்களின் ஆதார் எண்ணையும் வாக்காளர் பட்டியலில் இணைக்கும்பணிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மேலும்,  26, மே மாதம் 10 மற்றும் 24ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என்று அவர் கூறினார்.