விளையாட்டு விடுதியில் சேர்ந்து படிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக் கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை நேரு விளையாட்டு
மைதான த்தில் மாணவ, மாணவிகளுக்கான முதன்மைநிலை விளையாட்டு மையமும்,
திருச்சி, தி ருநெல்வேலியில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி, ஈரோட்டில்
மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது.
இவ்விளையாட்டு விடுதிகளில் 2015-2016ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள்
சேர்க்கை நடைபெறவுள்ளது. இங்கு 10 முதல் 14 வயதுக்குள்பட்ட திறமையான
சிறுவர், சிறுமிகள் சேர்க்கப்பட்டு சிறந்த பள்ளியில் படிக்கவும்,
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்க பயிற் சியாளர்கள் மூலம்
பயிற்சியளிக்கப்படுகிறது.
எனவே திருவாரூர் மாவட்டத்தில் தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை,
துடுப்புப் படகோ ட்டுதல், பாய்மரப்பட கோட்டுதல், ஜிம்னாஸ்டிக், நீச்சல்
மற்றும் டேக்வாண்டோ ஆகிய வி ளையாட்டுக்களில் ஆர்வமுள்ள 10 முதல் 14
வயதிற்குட்பட்ட மாணவர்கள் 6,7 மற்றும் 8- ம் வகுப்புகளில் முதன்மைநிலை
விளையாட்டு மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து
ஏப்.20-ம் தே திக்குள் மேலாளா், முதன்மை நிலை விளையாட்டு மையம், அறை எண்
76, ஜவா்ஹா் லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-600 003 என்ற
முகவரிக்கு நேரி ல் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். மேலும்
விவரங்களுக்கு மாவட்ட விளை யாட்டு அலுவலகத்தை 04366-227158 எண்ணில்
தொடர்புகொள்ளலாம்.