திருநெல்வேலி மாவட்டம், களக்காடு
அருகே பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யுமாறு மாணவர்களை வற்புறுத்தியதாக வந்த
புகாரினை அடுத்து, பள்ளி நிர்வாகி, ஆசிரியர் உட்பட 8 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
களக்காடு அருகே கீழப்பத்தை பண்டிதன்குறிச்சியில் அரசு
உதவிபெறும் தனியார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் 500-க்கும்
மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி கழிவறையில் உள்ள அடைப்புகளை சுத்தம்
செய்யுமாறு இப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் சிலரை ஆசிரியைகள்
வியாழக்கிழமை வற்புறுத்தினராம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் பெற்றோர்களிடம்
புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கீழவடகரை, கீழப்பத்தை ஆகிய கிராமங்களைச்
சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்,காவல்நிலையத்தில் அளித்த புகாரினை அடுத்து,
பள்ளி நிர்வாகி, 7 ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.