சென்னை:'தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி; பத்தாம் வகுப்பு
தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி ெவளியிடப்படும்' என, தமிழக அரசு
அறிவித்துள்ளது.
தமிழகம்
மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கி, 31ம்
தேதி முடிந்தது.
8.75 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுதினர்.விடைத் தாள்களை
திருத்தும் பணி, மார்ச் 16ம் தேதி
துவங்கியது.
நேற்று முன்தினம், பணி நிறைவு பெற்றது. மதிப்பெண் சரிபார்ப்பு, விடை
திருத்தும் மையப் பட்டியல்படி, மதிப்பெண், 'சிடி' தயாரிப்பு, மதிப்பெண்
பட்டியல்
தயாரிப்பு ஆகிய பணிகள், தற்போது நடந்து வருகின்றன.
பத்தாம்
வகுப்பு தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10ம் தேதி நிறைவு
பெற்றது. தமிழகம் முழுவதும், 3,298 மையங்களில், 10.72 லட்சம் பேர் தேர்வு
எழுதினர்.'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி வெளியாகும்' என, நான்கு
நாட்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதை அரசு நேற்று
உறுதி செய்து, தேர்வு முடிவு வெளியாகும் தேதியை, முறைப்படி
அறிவித்தது.அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி, காலை 10:00
மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வுகள், மே 21ம் தேதி, காலை 10:00 மணிக்கும்
வெளியாகின்றன.
தேர்வு
எழுதிய மாணவர்கள், தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டைப் பதிவு
செய்து, தேர்வு முடிவுகளை, மதிப்பெண்களுடன், www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in, ஆகிய இணைய
தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இது
தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய
தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும், கட்டணம்
இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மாணவர்கள் தாங்கள் படித்த
பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.