ஒன்பது அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து

சென்னை: தமிழகத்தை சேர்ந்த ஒன்பது அதிகாரிகளுக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கி, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

* சென்னை மாநகராட்சி தேர்தல் பிரிவு, மாவட்ட வருவாய் அலுவலர் செந்தாமரை.

* நிலம் மற்றும் உடைமை துறை, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்.

* தேனாம்பேட்டை மண்டல அலுவலர் அண்ணாதுரை.

* இந்திய மருத்துவப் பணிகள் கூடுதல் இயக்குனர் நடராஜன்.

* தமிழ்நாடு இணை தலைமை தேர்தல் அதிகாரி சிவஞானம்.

* டெக்ஸ்கோ (தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர் பாதுகாப்பு கழகம்) பொது மேலாளர் நிர்மல்ராஜ்.

* முதல்வர் அலுவலக துணை செயலர் ராமன்.

* மத்திய அரசு பணியில் உள்ள, ஆசியா மரியம், ராஜசேகர் ஆகியோருக்கு, மத்திய அரசு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கி உள்ளது.