ஏப்ரல் 15 முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிசாமி ச
னிக்கிழமை தெரிவித்தார்.
இந்தச் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள சுமார் 40,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு காய்கறி வாங்கவும், சமைக்கவும் தலா ரூ. 1.30-ம், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 1.40-ம் அரசு வழங்குகிறது. இப்போதுள்ள விலைவாசிக்கு இது உகந்ததாக இல்லை. எனவே, இந்தத் தொகையை ரூ. 5-ஆக உயர்த்த வேண்டும்.
சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்கவேண்டும். சமையல் உதவியாளர்களுக்கு, சமையலராக பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இந்தக் கோரிக்கைகளை அரசு ஏற்காவிடில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கால
வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.