ஆசிரியர்கள் ஆலோசனை

கம்பம்:உத்தமபாளையம் கள்ளர் பள்ளி கிளையின் ஆலோசனை கூட்டம் தலைவர் சேதுமல்லையராசா தலைமையில் நடந்தது. ஆசிரியர் சுந்தர் முன்னிலை வகித்தார். செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட
செயலாளர் ராஜ்குமார் பேசினார். 7 ஆண்டுகளாக கள்ளர் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 64 ஆசிரியர்களும் கோர்ட் வழக்கால் பணி நியமனம் பெற முடியாமல் உள்ளனர். காலிப்பணி யிடங்ளை நிரப்ப வலியுறுத்தி உசிலம்பட்டியில் வரும் மார்ச் 1 ல் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.