தானியங்கி இன்சுலின் செலுத்தும் கருவி அறிமுகம்

சர்க்கரை நோயாளிகளுக்கு தானியங்கி முறையில் இன்சுலின் செலுத்தும் அதி நவீன வசதியை டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மருத்துவ மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அந்த மருத்துவ மையத்தில் திங்கள்கி
ழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதி நவீன தனியங்கி இன்சுலின் செலுத்தும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 24 மணி நேரமும் உடலின் ரத்த சர்க்கரை அளவுக்கு ஏற்ப இன்சுலின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
உணவு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் மாறுபாடு இருந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான அளவில் இன்சுலின் இதன் மூலம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.