ஒபாமா தில்லி வந்தடைந்தார்

குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது மனைவியுடன்  தில்லி வந்து
சேர்ந்தார். தில்லி பாலம் ஏர்போர்டை வந்தடைந்த அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் ஒபாமாவுக்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
அவரது இந்தப் பயணத்தின்போது இரு நாடுகள் இடையே வர்த்தகம், பருவநிலை மாற்றம், கூட்டாக பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பது, ஆக்கப்பூர்வ அணுசக்தியில் நிலவும் வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பது, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.