மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் கொடுக்கப்பட்டது பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தகவல்


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ–மாணவிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவைத்தொகை ரூ.3 கோடியே 18
லட்சம் வழங்கப்படாமல் இருந்தது. அந்த தொகை இப்போது வழங்கப்பட்டு விட்டது. அந்த ஆசிரியர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.