கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சல் அலுவலர் பணிகளுக்கு தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, திருப்பூர் தலைமை அஞ்சல் நிலையக் கோட்ட
க் கண்காணிப்பாளர் எழில் வெளியிட்ட செய்தி:
திருப்பூர் அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட சின்னப்புதூர், கிட்டாம்பாளையம், ஜெ.கிருஷ்ணாபுரம், மங்களகரைப்புதூர், திங்களூர் ஆகிய கிளை தபால் அலுவலகங்களில் கிளை அஞ்சலக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜெ.கிருஷ்ணாபுரம் பணியிடம் ஓ.பி.சி. பிரிவினருக்கும், மங்களகரைப்புதூர் பணியிடம் எஸ்.சி. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிற இடங்களுக்கு, அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான தகுதி, நிபந்தனை, இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்களை கோட்டக் கண்காணிப்பு அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, கணினிப் பயிற்சி பெற்றவராகவும், 18 முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 28-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.