வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

புதுடெல்லி:வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியை 0.25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, கச்சா எண்ணெய் வி
லை சரிவு ஆகியவற்றின் காரணமாக வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டியை (ரெப்போ) 0.25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இருப்பினும், வங்கிகளின் கையிருப்பு தொகையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி குறைப்புக் காரணமாக, வங்கிகளில் வாங்கப்படும் வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதேநேரத்தில், வட்டி குறைப்பு காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 46 பைசா உயர்ந்து 61.72 ரூபாயாக உள்ளது.இதேபோல், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் மதிப்பு 600 புள்ளிகள் அதிகரித்து 27,947.59 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 176.05 புள்ளிகள் அதிகரித்து 8,453.60 புள்ளிகளாக உள்ளது.