சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் சா
லை ஆய்வாளர் நிலை 2-ல் உள்ள காலிப்பணியிடங்கள் இரண்டு இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியுள்ள நபர்கள்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஐ.டி.ஐ. கட்டட வரைவாளர் அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 1.7.2014 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கல்வித் தகுதிச் சான்றின் நகல் மற்றும் ஜாதிச் சான்றின் நகலுடன் விண்ணப்பத்தை சார் ஆட்சியர் அலுவலகம், அரியலூர் - 621704 என்ற முகவரிக்கு வரும் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.