ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : சட்டசபை தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில்
திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மகளிரணி செயலாளர் ஜெயந்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜெகதீஷ்குமார், கள்ளர் பள்ளிகள் கிளை மாவட்ட செயலாளர் அருள்விஜய், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் அமிர்தராஜ் பேசினர். மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ்பிரிட்டோ நன்றி கூறினார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.