பள்ளிகளுக்கு ஆங்கில ஒலி உச்சரிப்பு 'சிடி'

காரைக்குடி: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கிலத்தை எளிதில் கற்று கொள்வதற்கான திட்டத்தின் கீழ், 43 பாடங்களை கொண்ட 2 'சிடி'க்கள் தொடக்கக் கல்வித்துறையால் தயார்
செய்யப்பட்டு உள்ளன. ஒரு மாவட்டத்துக்கு 50 வீதம், 1,600 'சிடி'க்கள், 3,200 விளக்க குறிப்பேடுகள் வழங்கப் பட உள்ளன. இந்த 'சிடி'க்களை அனைத்து தொடக்க, பள்ளிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 'டிவி', டி.வி.டி., மூலமும்; நடுநிலை பள்ளிகள் புரஜெக்டர் மூலமும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுடன் இணைந்து, இதற்குரிய பயிற்சியை தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டும்.