பிளஸ்–2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 5–ந்தேதி தொடங்குகிறது


தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–2 வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு தேர்வு மார்ச் 5–ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

முன்னதாக பிளஸ்–2 செய்முறை தேர்வு (பிராக்டிக்கல்) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவுபடி நடைபெற உள்ளது. பிப்ரவரி 5–ந்தேதி முதல் பிப்ரவரி கடைசிக்குள் தேர்வை நடத்தி முடித்து, மாணவ–மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை தரும்படி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி 5–ந்தேதி முதல் பிப்ரவரி 12–ந்தேதி வரையிலும் 50 சதவீத மாணவர்களும், பிப்ரவரி 13–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை 50 சதவீத மாணவர்களும் செய்முறை தேர்வு செய்ய உள்ளனர்.