தேசிய திறனறித் தேர்வு: 1.28 லட்சம் பேர் எழுதினர்

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறனறி (என்.எம்.எம்.எஸ்.) தேர்வை தமிழகம் முழுவதும் 1.28 லட்சம்
பேர் சனிக்கிழமை எழுதினர்.
இந்தத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பள்ளிக் கல்வித் துறையிடம் முடிவுகள் ஒப்படைக்கப்படும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.500 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.