சென்னை மண்டல ஆணையர் பங்கஜ் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியுள்ளதாவது: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு மாதமும்
10ம் தேதி பவிஷயா நிதி அடல்ட் குறைதீர்வு
கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், தொழிலாளர்கள் தங்களுடைய நீண்டநாள் கோரிக்கைகள், நிலுவையில் உள்ள குறைகள் ஏதேனும் இருந்தால் கூறலாம்.
அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான கூட்டம், வரும் 10ம்
தேதி, காலை 10 மணி முதல் 1 மணி வரை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வைப்பு
நிதி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. தொழிலாளர்கள் தங்களுடைய பெயர், கணக்கு
எண், பி.எப். எண் மற்றும் அவர்களுடைய குறைகளை மக்கள் தொடர்பு அதிகாரியிடம்
இந்த மாதம் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், தொழிலாளர்கள் தங்களுடைய நீண்டநாள் கோரிக்கைகள், நிலுவையில் உள்ள குறைகள் ஏதேனும் இருந்தால் கூறலாம்.