சிறப்பு ஆசிரியர்களுக்கான‌ சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்,
உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சிறப்பு குழந்தைகள் பலர் படித்து வருகிறார்கள். இந்த குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு 2013-14-ம் ஆண்டு சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது.

      இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, நேற்று 2013-14-ம் ஆண்டுக்கான சம்பளம் அந்தந்த ஆசிரியர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும், 2014-ம் ஆண்டு முதல் இதுவரை வழங்கப்படாத சம்பளமும் விரைவில் வழங்கப்பட உள்ளது.

இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.