அரசு பள்ளியில் கே.பி.க்கு நினைவஞ்சலி

சென்னை: சென்னை முத்துபேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. பாலசந்தர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் இப்பள்ளியில் சில காலம் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.
அதனடிப்படையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்சி நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.