மாணவர்களிடையே செஸ் ஆர்வம் அதிகரிப்பு : ஆனந்த்

நாமக்கல்:மாணவர்களிடையே செஸ் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதாக செஸ் வீரர் விஸ்வநாத் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: செஸ் விளையாட்டில் திறமையை
வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் நேரங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதனை கற்றுக்கொள்ள ஆகும் செலவு குறைவாகும். பிற விளையாட்டு களை போன்று இந்த விளையாட்டிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநில அரசும் பள்ளிகளி்ல் கற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்