டி.என்.பி.எஸ்.சி., தேர்வு: குரான் கேள்வியால் சர்ச்சை

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், திருக்குரான் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், 'குரானின்படி,
'மாமலூக்' என்பதன் அர்த்தம் என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, 'ஏழை, அடிமை, செல்வந்தன், மன்னன்' என, நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த கேள்விக்கு, குரான் படித்தவர்களால் மட்டுமே, பதில் அளிக்க முடியும்; மற்றவர்களால் பதில் அளிக்க இயலாது என்பதால், சர்ச்சையை ஏற்பட்டு உள்ளது.

ஆச்சரியம்:

இது தொடர்பாக, டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள, பொருளாதார வல்லுனர் குருமூர்த்தி, 'குரான் தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், கேள்வி கேட்கப்பட்டிருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. குரானுக்கும், இந்த தேர்வுக்கும் என்ன தொடர்பு?' என, கேள்வி எழுப்பி உள்ளார்.