இதுகுறித்து
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''கூட்டுறவுத் அமைப்பு பதிவாளராக இருந்த
ஆர். கிர்லோஷ் குமார் நகர் மற்றும்
ஊர்
அமைப்பு திட்டத் துறை
இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி
மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன்
கூட்டுறவு துறை பதிவாளராக பணியிட
மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த
பழனிச்சாமி, திருச்சி மாவட்ட ஆட்சியராகவும், திண்டுக்கல்
மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடாச்சலம் தேனி
மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல, விருதுநகர் மாவட்ட
ஆட்சியராக இருந்த ஹரிஹரன் திண்டுக்கல்
ஆட்சியராகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த
ராஜாராமன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் பணியிட
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்
மாவட்ட ஆட்சியராக இருந்த முனுசாமி சிவகங்கை
மாவட்ட ஆட்சியராகவும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு புதிய ஆட்சியராக எஸ்
பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.