தழிழ்நாடு வனத்துறையில் 181 காலிப்பணியிடங்கள்

சென்னை: தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 181 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தழிழ்நாடு வனத்துறையில் 181 காலிப்பணியிடங்கள் துறை: தமிழ்நாடு வனத்துறை பணியின் பெயர்: வனக் காப்பாளர் காலியிடங்கள்: 148 துறை: தமிழ்நாடு வனத்துறை தோட்டக் கழகம் பணியின் பெயர்: வனக் காப்பாளர் காலியிடங்கள்: 17 சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,400 துறை: அரசு ரப்பர் கழகம் பணியின் பெயர்: கள உதவியாளர் காலியிடங்கள்: 16 சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,200 கல்வித் தகுதி: விவசாயம், கால்நடை பராமரிப்பு, தாவரவியல், வேதியியல், கம்யூட்டர் சயின்ஸ், , சுற்றுச்சுழல் அறிவியல், வனவியல், நிலவியல், தோட்டக்கலை, இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிரியல், விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கும் தேதி: 02.01.2015 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2015 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.02.205 எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, பர்சனாலிட்டி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 60 தேர்வுக் கட்டணம்: ரூபாய் 262 மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே "கிளிக்" செய்யவும். இதுபோன்ற பல்வேறு வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடுங்கள்.