Direct Recruitment of Postman / Mail Guard in Postal Divisions | தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள, 806 தபால்காரர் மற்றும் மெயில்கார்டு பணியிடங்களுக்கு, இணையம் மூலம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடைசி நாள், டிசம்பர், 7ம் தேதி.

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள, 806 தபால்காரர் மற்றும் மெயில்கார்டு பணியிடங்களுக்கு, இணையம் மூலம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அஞ்சல் துறையின் முதன்மை அஞ்சல்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அஞ்சல் வட்டத்தில்,

அஞ்சலக கோட்டங்கள் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் காலியாக உள்ள, தபால்காரர்- - 797, மெயில்கார்டு - 9 என, மொத்தம், 806 பணியிடங்களுக்கு, இணையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். சம்பள விகிதம், 5,200 முதல், 20,200 ரூபாய் வரை. மேலும், விவரங்களுக்கு,www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள், டிசம்பர், 7ம் தேதி.இவ்வாறு, செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.