கல்வி மாவட்டத்துக்கு வந்த பொதுத்தேர்வு விடைத்தாள்

விருத்தாசலம் கல்வி மாவட்டத்துக்கான பொதுத் தேர்வு விடைத்தாள்கள், அரசு அச்சகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்வுக்கான விடைத்தாள்கள் அரசு அச்சகம் சார்பில், அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதன்படி, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பள்ளி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.