கருப்பு பேட்ஜ் அணிந்து பணி - DINAMALAR

கச்சிராயபாளையம்: பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து பள்ளி ஆசிரியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்
கடந்த 20 ம் தேதி தாக்கப் பட்டார். இதனை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முது நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் நேற்று பள்ளிக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல முடிவு செய்யயப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையிலான ஆசிரியர்கள் குதிரைச்சந்தல் அரசு உயர் நிலை பள்ளியில் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.