பிஎஸ்என்எல் இணைப்பு பெற ஆதார் எண் தரலாம்

பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு பெற விண்ணப்பத்தில் ஆதார் எண் இருந்தால் குறிப்பிடலாம். எண் இல்லை என்றாலும் இணைப்பு பெறலாம் என்று சென்னை தொலைபேசி தெரிவித்துள்ளது.

              சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய தொலைத் தொடர்பு துறையின் உத்தரவின்படி புதிதாக பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு பெறுபவர்கள் விண்ணப்பத்தில் ஆதார் எண்ணை கு றிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் ‘ஆதார் எண் இல்லை என்று குறிப்பிட வேண்டும். இந்த மாற்றம் டிச.1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறதுÕ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.